நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோட்டில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. காலை 9:00 மணிக்கு சில நிமிடங்கள் சாரல் மழை பெய்தது. அதன்பிறகு வானம் மந்தமாகவே இருந்தது. மாலை 4:45 மணிக்கு சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, வீரப்பன்சத்திரம், பஸ் ஸ்டாண்ட், நசியனுார் ரோடு, பெருந்துறை ரோடு என பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழை 30 நிமிடம் நீடித்தது. தாழ்வான பகுதிகள், குண்டும் குழியுமான இடங்களில் மட்டும் மழைநீர் தேங்கியது. மற்றபடி எந்தவித பாதிப்பும் இல்லை.