ADDED : பிப் 04, 2025 05:48 AM
இடைத்தேர்தலில் ஓட்டுசாவடி மையங்களாக செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு, நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஓட்டுப்பதிவுக்கு உரிய ஏற்பாடுகளை செய்வதற்காக, மாநகரில் உள்ள சில பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்-டுள்ளது.
இதன்படி சத்தி ரோடு மாநகராட்சி துவக்க பள்ளி, திருநகர் காலனி மாநகராட்சி நடுநிலை பள்ளி, பெரிய மாரியம்மன் கோவில் வீதி மாநகராட்சி துவக்க பள்ளி, வைராபாளையம் பஞ்.யூனியன் நடுநிலை பள்ளி,
வளையக்கார வீதி மாநகராட்சி துவக்க பள்ளி, அருள் நெறி திருப்பணி மன்ற துவக்க பள்ளி, காமராஜ் வீதி
மாநகராட்சி துவக்க பள்ளி, அக்ரஹாரம் பஞ்.யூனியன் நடுநிலை பள்ளி, கச்சேரி வீதி மாநகராட்சி துவக்க பள்ளி,
பாலசுப்பராயலு வீதி மாநகராட்சி துவக்க பள்ளி, சி.எஸ்.ஐ., ஸ்டேஷன் ரோடு துவக்க பள்ளி, வீரப்பம்பாளையம்
பஞ்.யூனியன் துவக்க பள்ளி, விநாயகர் கோவில் வீதி மாநகராட்சி துவக்க பள்ளி, குமலன்குட்டை பஞ்.யூனியன்
துவக்க பள்ளி, ரயில்வே காலனி பஞ்.,யூனியன் நடுநிலை பள்ளி, பெரியவலசு பஞ்.யூனியன் துவக்க பள்ளிக்கு
இன்று முழு நேரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கலைமகள் கல்வி நிலையம் துவக்க பள்ளி, எஸ்.கே.சி. சாலை மாநகராட்சி நடுநிலை பள்ளி,
லலிதா கல்வி நிலையம் நடுநிலை பள்ளி, செங்குந்தர் துவக்க பள்ளி, பெரியார் வீதி துவக்க பள்ளி, மதரசா
இதயத்துல்லா துவக்க பள்ளி, வீரப்-பன்சத்திரம் பஞ்.யூனியன் துவக்க பள்ளி, இடையன்காட்டு வலசு துவக்க
பள்ளி, அசோகபுரம் பஞ்.யூனியன் நடுநிலை பள்ளிக்கு இன்று அரை நாள் மட்டும் விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளது. நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்-ளது.

