/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இடி தாக்கியதில் வீட்டு சுவர் சேதம்
/
இடி தாக்கியதில் வீட்டு சுவர் சேதம்
ADDED : ஏப் 21, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. புன்செய் புளியம்பட்டி நகராட்சி கண்ணகி வீதியில் சுல்தான், 48, வீட்டை இடி தாக்கியது.
இதில் வீட்டின் சுவர் இடிந்தது. மாடியில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் டேங்க் மற்றும் பியூஸ் கேரியர் உடைந்தது. அதே பகுதியில் மின்னல் பாய்ந்ததால் ஐந்து வீடுகளில் டிவிக்கள் பழுதாகி விட்டன.

