ADDED : செப் 07, 2025 01:14 AM
அ நிறம் | அளவு
பவானி, ஈரோடு அருகே ஆர்.என்.புதுாரை சேர்ந்தவர் கோமலா, 29; இவரின் கணவர் யோகேஸ்வரன், 35; கோமலா கடந்த, 3ம் தேதி கோவிலுக்கு சென்றிருந்தார்.
அப்போது அவரை மொபைல்போனில் தொடர்பு கொண்ட யோகேஸ்வரன், வீட்டை விட்டு வெளியேறுகிறேன், என்னை தேட வேண்டாம் என பதிவு செய்துவிட்டு, மொபைல்போனை வைத்து விட்டு வெளியே சென்றுவிட்டார். கோவிலில் இருந்து திரும்பிய கோமலா, கணவன் பதிவு செய்து வைத்திருந்த வீடியோவை பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.
