/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு அலுவலக குப்பைகளை வெளியேற்ற துாய்மை இயக்க நிகழ்ச்சியில் யோசனை
/
அரசு அலுவலக குப்பைகளை வெளியேற்ற துாய்மை இயக்க நிகழ்ச்சியில் யோசனை
அரசு அலுவலக குப்பைகளை வெளியேற்ற துாய்மை இயக்க நிகழ்ச்சியில் யோசனை
அரசு அலுவலக குப்பைகளை வெளியேற்ற துாய்மை இயக்க நிகழ்ச்சியில் யோசனை
ADDED : செப் 20, 2025 01:37 AM
ஈரோடு, துாய்மை தமிழ்நாடு நிறுவனம் சார்பில், துாய்மை இயக்கம் 2.0 மூலம் அரசு அலுவலகங்களில் சேகரிக்கப்பட்ட கழிவுகளை, விற்பனை செய்யும் பணி துவக்க நிகழ்ச்சி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலையில் நேற்று நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
ஈரோடு உட்பட பெருநகரங்களில் அதிகாலை, 4:00 மணிக்கு பின் துாய்மை பணியை துவக்குகின்றனர். அதேநேரம் பல்வேறு துறைக்கான அலுவலகங்களில் நுாற்றுக்கணக்கானவர்கள் பணி செய்வதுடன், பலரும் வந்து செல்கின்றனர். அங்கு உருவாகும் குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள், இயந்திரம் போன்ற கடினமான பொருட்கள், இ-வேஸ்ட்களை முறையாக அப்புறப்படுத்தினால் இன்னும் சுத்தமாகும்.
இதற்காக ஒவ்வொரு மாதமும் நாம் சேகரிக்கும் குப்பைகளை கடைசி வெள்ளி கிழமை அன்று, அவற்றை ஒரே இடத்துக்கு அனுப்பி விற்பனை செய்யலாம். அல்லது வெளியேற்றி அகற்றலாம். இதன் மூலம் அலுவலகமும், சமூகமும் சுத்தமாகும். இவ்வாறு பேசினார். குப்பைகளை அகற்றுவது தொடர்பான உறுதிமொழி ஏற்றனர்.கூட்டத்தில் ஈரோடு தி.மு.க., எம்.பி., பிரகாஷ், ஈரோடு கிழக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், திட்ட இயக்குனர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.