ADDED : மார் 31, 2025 02:55 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்: தாராபுரம் ஒன்றிய தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, அலங்கியம் பெரிய பள்ளிவா-சலில், நேற்று மாலை இப்தார் விருந்து நடந்தது. ஒன்றிய செய-லாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
பள்ளிவாசல் தலைவர் ரஹ்மத்துல்லாஹ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலு முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்-பாளர் சிலம்பரசன் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் லியாகத் அலி, சாகுல்லா பாஷா, முகமது ஹசன் உள்பட நூற்றுக்கும் மேற்-பட்டோர் பங்கேற்றனர்.
