/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'இண்டியா' கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம்
/
'இண்டியா' கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம்
ADDED : மார் 23, 2024 07:54 AM
ஈரோடு : 'இண்டியா' கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம், எம்.பி., கணேசமூர்த்தி தலைமையில், ஈரோடு அடுத்த மேட்டுக்கடையில் நடந்தது. எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ., இளங்கோவன் முன்னிலை வகித்தனர். ஈரோடு லோக்சபா தொகுதி வேட்பாளர் பிரகாைஷ அறிமுகம் செய்து வைத்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:
இக்கூட்டணியில் செயல்பாட்டை, ஈரோடு கிழக்கு தேர்தலில் நாம் கண்டுள்ளோம். அதனால், 66,000 ஓட்டு வித்தியாசத்தில் காங்., வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெற்றார். அதுபோல, லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த மகளிர் உரிமைத்தொகை, பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்றவற்றை மக்களிடம் எடுத்து செல்லுங்கள். சென்னை, துாத்துக்குடி புயல், மழை, வெள்ள பாதிப்புக்கான நிவாரணத்தை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை என்ற போதிலும், கடும் நிதிச்சுமையுடன், இவற்றை முதல்வர் நிறைவேற்றுகிறார். இவ்வாறு பேசினார். வேட்பாளர் பிரகாஷ், மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

