/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சோலார் அமைப்புக்கு இந்தியா மீண்டும் தலைமை
/
சோலார் அமைப்புக்கு இந்தியா மீண்டும் தலைமை
ADDED : நவ 05, 2024 06:42 AM
சர்வதேச சூரியமின்சக்தி கூட்டணியின் தலைமைப் பொறுப்புக்கு, இந்தியா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்-சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த கூட்டணியின் ஏழா-வது பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டமைப்புக்கு 2026 வரை இந்தியா தலைமை தாங்கவுள்ளதாக தெரிவித்தார்.
துணை தலைமை பதவிக்கு பிரான்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறிய அமைச்சர், சூரியமின்சக்தி உற்பத்தியில் இந்தியா அபரிமித வளர்ச்சி கண்டு வருவதை, சர்வதேச அமைப்பின் தலைமைப் பொறுப்புக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்-வதாக தெரிவித்தார்.
ஆப்ரிக்க மண்டலத்தில் இருந்து கானா, சீஷெல்ஸ் நாடுகளும் ஆசியா, ஆசிய பசிபிக் மண்டலத்துக்கு ஆஸ்திரேலியா, இலங்கை ஆகியவையும் துணைத் தலைமைக்கு தேர்வானதாக-வும் பிரகலாத் ஜோஷி கூறினார்.

