ADDED : ஏப் 08, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் பால்ராஜ், 34; ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே ஒரு பைனான்சில் பணிபுரிந்தார்.
கடந்த, 6ம் தேதி அதிகாலை அறையில் தங்கியிருந்த பால்ராஜு, திடீரென நெஞ்சு படபடப்பாக இருப்பதாக, உடனிருந்தவர்களிடம் தெரிவித்தார். சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து அவரின் தந்தை பெரியசாமி புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

