ADDED : நவ 11, 2024 07:30 AM
ஈரோடு: பள்ளிக்கல்வித்துறை சார்பில், 65வது மாநில அளவிலான குடியரசு தின விழா தடகளப்போட்டி, ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் மாணவர்களுக்கான போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், 2,710 தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மூன்று பிரிவுகளில், 43 வகையான போட்டி நடக்கிறது.
இரண்டாவது நாளாக நேற்றும் நடந்த ஓட்டப்பந்தயம், டிரிபிள் ஜம்ப், போல்வால்ட், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் முதல் இடங்களை பிடித்த வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிழ் வழங்கப்பட்டது. இன்று இறுதிப்போட்டி நடக்கிறது. அதிக புள்ளிகள் எடுக்கும் மாவட்ட அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வழங்கப்படும். போட்டி ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை தலைமை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் செய்துள்ளனர்.