ADDED : பிப் 11, 2026 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: நவீன தொழில் நுட்பம், பாதுகாப்பான தெரிவுகள், பொறுப்புடன் கூடிய பாதுகாப்புடன் செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஈரோட்டில் நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து பேசியதாவது: இணையத்தை பயன்படுத்தும் அனைவரும், குறிப்பாக குழந்தைகள், இளைஞர்கள் பொறுப்பாக கையாள வேண்டும்.
கடவுச்சொல் பாதுகாப்பு, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்க்குகளில் பரிவர்த்தனை செய்யக்கூடாது. இவ்வாறு பேசினார். நிகழ்வில் சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., வேலுமணி, தேசிய தகவலியல் மைய மாவட்ட தகவலியல் அலுவலர் ஜெகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

