ADDED : ஜூன் 07, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, :ஈரோடு மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, 33 விடுதிகள் உள்ளன. இதில் பள்ளி விடுதிகளில், 4 முதல், பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியரும், கல்லுாரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் மாணவ, மாணவியர் சேரலாம். தகுதியானோர் உரிய விண்ணப்பத்தை, சம்மந்தப்பட்ட விடுதி
காப்பாளரிடம் அல்லது கலெக்டர் அலுவலக புதிய கட்டடம், 4 வது மாடியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெறலாம். பள்ளி விடுதிக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும், 18க்குள்ளும், கல்லுாரி விடுதிக்கான விண்ணப்பங்கள், 15க்குள்ளும் அனுப்ப வேண்டும்.