ADDED : அக் 05, 2025 12:52 AM
ஈரோடு, ஈரோடு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடித போட்டி, 'லெட்டர் டூ மை ரோல் மாடல்' தலைப்பில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என ஏதேனும் ஒரு மொழியில், 'முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை-2' என்ற முகவரிக்கு எழுதி அனுப்ப வேண்டும். உறையின் மீது, 'Dal Akhar-அஞ்சல் துறை கடித போட்டி-2025-26' என குறிப்பிட வேண்டும்.
டிச.,8க்குள் அனுப்ப வேண்டும். 18 வயது வரை, உள் நாட்டு அஞ்சல் அட்டை பிரிவு, அஞ்சல் உரை பிரிவிலும், 18 வயதுக்கு மேற்பட்டோர், உள்நாட்டு அஞ்சல் அட்டை பிரிவு, அஞ்சல் உறை பிரிவு எனவும், 4 பிரிவாக போட்டியில் பங்கேற்கலாம். அஞ்சல் உறை பிரிவில், ஏ-4 அளவு வெள்ளை தாளில், 1,000 வார்த்தைக்கு மிகாமலும், உள்நாட்டு அஞ்சல் அட்டை பிரிவில், 500 வார்த்தைக்கு மிகாமல் எழுத வேண்டும்.
கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்கப்படும்.ஒவ்வொரு பிரிவிலும் மாநில அளவில் முதல், 3 பரிசாக, 25,000, 10,000, 5,000 ரூபாய்; தேசிய அளவு பரிசாக, 50,000, 25,000, 10,000 ரூபாய் வழங்கப்படும். மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று கடிதங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும். பின் தேசிய போட்டி பரிசு அறிவிக்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.