ADDED : ஏப் 19, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
கொடுமுடி :கொடுமுடி சாலை புதுாரில் வசிப்பவர் நவலடியான் சேகர் (எ) சேகர், 50; கொடுமுடியில் நவலடியான் மெட்டல் மார்ட் (பாத்திர கடை) நடத்துகிறார்.
அரசியல் கட்சிகளுக்கு மேடை அமைத்து தரும் வேலையையும் செய்கிறார். இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை, வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு பேர் வந்து சோதனை செய்தனர். இரவை கடந்து சோதனை தொடர்ந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு தொடர்பாக சோதனை நடப்பதாக தெரிவித்தனர்.
