ADDED : மார் 01, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை:அ.தி.மு.க., பெருந்துறை கிழக்கு ஒன்றியம் சார்பில்,ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பெருந்துறை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் நடந்தது.
செயலாளர்
அருள்ஜோதி செல்வராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. ஜெயகுமார் முன்னிலை
வகித்தார். கட்சி அமைப்பு செயலாளர் சிவசாமி, ஈரோடு புறநகர் கிழக்கு
மாவட்ட செயலாளர் கருப்பணன், கட்சி பேச்சாளர்கள் குலாப் ஜான்,
பரசுராமன் உட்பட பலர் பேசினர்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்
பொன்னுதுரை, பொன்னுசாமி, ஒன்றிய செயலாளர் விஜயன், பெருந்துறை
யூனியன் சேர்மேன் சாந்தி ஜெயராஜ், யூனியன் துணை தலைவர் உமா மகேஸ்வரன், நகர
செயலாளர்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியன்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

