ADDED : ஜூலை 23, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, பெருந்துறை, வண்ணான்பாறை, எம்.ஜி.ஆர்.சாலை பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி, 48, தொழிலாளி. குடும்பத்துடன் திருச்செந்துார் கோவிலுக்கு சென்றவர், நேற்று முன்தினம் காலை வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ஒன்றரை பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. அவர் புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.