sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காலைக்கதிர் முகவர் குடும்ப விழா கோலாகலம்

/

காலைக்கதிர் முகவர் குடும்ப விழா கோலாகலம்

காலைக்கதிர் முகவர் குடும்ப விழா கோலாகலம்

காலைக்கதிர் முகவர் குடும்ப விழா கோலாகலம்


ADDED : அக் 12, 2025 02:05 AM

Google News

ADDED : அக் 12, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு;காலைக்கதிர் முகவர்கள் குடும்ப விழா நேற்று ஈரோட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் ஈரோடு, கரூர் மாவட்ட முகவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். அவர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

மக்களின் மன சாட்சியாக உள்ள காலைக்கதிர் நாளிதழ் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த வெற்றியின் பின்னணியில் காலைக்கதிர் நாளிதழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முகவர்களின் உழைப்பை சிறப்பிக்கும்படி முகவர்கள், 'குடும்ப விழா-2025' ஈரோடு முனிசிபல் காலனி சுப்பிரமணிய கவுண்டர் மஹால் திருமண மண்டபத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

முதலில் வந்த முகவர்களின் இல்லத்தரசிகள், 5 பேர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். தொடர்ந்து காலைக்கதிர் வெள்ளி நாணயத்தை அதன் ஆசிரியர் ராமச்சந்திரன், பொது மேலாளர் ஜெரால்டு வெளியிட, விற்பனை மேலாளர் செந்தில்குமார் பெற்று கொண்டார்.

தொடர்ந்து சிறப்பு அமர்வில் செல்வம் சேர்க்கலாம் வாங்க தலைப்பில் எழுத்தாளர் செல்வேந்திரன் பேசியதாவது: அறத்துடன் கூடிய தொழில் பத்திரிக்கை. நாளிதழ்கள் ஆரம்பிக்கப்பட்ட போது வியாபார நோக்கம் இல்லை. சுதந்திர

போராட்டத்தை மக்கள் தெரிந்து கொள்ளவே நாளிதழ்கள் துவங்கப்பட்டன. இதில் முகவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களாக நாளிதழை மக்களிடம் சுதந்திர போராட்ட காலத்தில் சேர்த்தனர்.

'டிவி' சமூக ஊடகங்களில் வருவதை மக்கள் வதந்தியாக பார்க்கின்றனர். பொறுப்பு ஏற்கும் நாளிதழ்களை மக்கள் நம்புகின்றனர். நம்பிக்கை, தரம், நிலைபாடு பார்த்து வாசகர்கள் நாளிதழை படிக்கின்றனர்.

அடுத்த, 6 மாத காலங்களில், 8 சதவீதம் வரை நாளிதழ்கள் விற்பனை அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. விற்பனையில் தடைகளை பார்க்க கூடாது. வாய்ப்புகளை மட்டுமே பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ஈரோடு,கரூர் மாவட்ட அனைத்து முகவர்களுக்கும் காலைக்கதிர் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் முகவர் குடும்பத்தினருக்கு, தனித்தனியே புகைப்படங்களை அச்சிட்டு பெற்று சென்றனர்.






      Dinamalar
      Follow us