/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கலாசேத்ரா -கைவினை பொருள் கண்காட்சி
/
கலாசேத்ரா -கைவினை பொருள் கண்காட்சி
ADDED : பிப் 16, 2025 03:37 AM
ஈரோடு: ஈரோடு வ.உ.சி., மைதானம் அருகே ,மல்லிகை அரங்கம் எதிரில் உள்ள செல்லாயம்மாள் மகாலில், கலாசேத்ரா கைத்-தறி -கைவினை பொருள் கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த, 9ம் தேதி தொடங்கி நடந்து
வருகிறது.
இதில் கைத்தறி ரகங்களான மதுரை சுங்குடி சேலை, பெங்கால் காட்டன் சேலை, ஒரிசா சம்பல் பூரி சேலை, ஜெய்ப்பூர், ஹரி-யானா மெத்தை விரிப்புகள், கைத்தறி டாப்ஸ் ரகங்களான இக்கட், அஜ்ரக், பட்டோலா, லக்னோ சிக்கன் ஒர்க் மற்றும் குழந்-தைகளுக்கான காக்ரசோலி, ஜெய்ப்பூர் ஸ்கர்ட், ஐம்பொன் வளையல், நெக்லஸ், செயின்கள், மர பொம்மைகள், கருங்காலி மாலைகள், கீ செயின், யந்திரங்கள், கருங்காலி மரத்தில் செய்த வேல், திரிசூலம், சஸ்த்ர பந்தவேல், ருத்ராட்சங்கள் மற்றும் பித்-தளை விளக்குகள், பித்தளை சிலைகள் கண்காட்சிக்கும், விற்ப-னைக்கும் வைக்கப்பட்டுள்ளன.
கைத்தறி ரகங்களுக்கு, 20 சதவீதம் வரை, கைவினை பொருட்க-ளுக்கு, 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. காலை, 9:௦௦ மணி முதல் இரவு, 9:30 மணி வரை நடக்கும் கண்காட்சி, வரும், 23ம் தேதியுடன் நிறைவடைகிறது.

