sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அந்தியூர் ஸ்டூடியோவில் திருடிய கேரள கேமரா களவாணி கைது

/

அந்தியூர் ஸ்டூடியோவில் திருடிய கேரள கேமரா களவாணி கைது

அந்தியூர் ஸ்டூடியோவில் திருடிய கேரள கேமரா களவாணி கைது

அந்தியூர் ஸ்டூடியோவில் திருடிய கேரள கேமரா களவாணி கைது


ADDED : ஏப் 29, 2025 01:33 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 01:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்:

அந்தியூர், பத்ரகாளியம்மன் கோவில் எதிரில் உள்ள, ஒரு போட்டோ ஸ்டுடியோவில், கடந்த, 14ம் தேதி இரவு, பூட்டை உடைத்து உள்ளே புகுந்த ஆசாமி, கேமரா, ஹார்டு டிஸ்க்கை திருடி சென்றார். ஸ்டுடியோ உரிமையாளர் கவுதம் புகாரின் அடிப்படையில், அந்தியூர் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்டூடியோவில் திருடிய, கேரள மாநிலம் பாலக்காடு, புலிச்சேரி பகுதியை சேர்ந்த முபாரக் அலி, 50, என்பவரை கைது செய்துள்ளனர்.

எலக்ட்ரானிக் பொருட்களை மட்டுமே குறிவைத்து திருடும் இவர் மீது, கேரளாவில் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், 40க்கும் மேற்பட்ட வழக்கு உள்ளது. பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.

ஆடு விற்பனை அதிகரிப்பு

எருமப்பட்டி:

எருமப்பட்டி அருகே, பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, முட்டாஞ்செட்டி, கஸ்துாரிப்பட்டி, நவலடிப்பட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, விவசாயிகள் தங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்நிலையில், எருமப்பட்டி யூனியனை சுற்றியுள்ள கிராமங்களில் சித்திரை மாத மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இதனால், நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில், ஆடுகள் விற்பனை அதிகரித்து, 15 லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.






      Dinamalar
      Follow us