ADDED : ஜூலை 27, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கேரள மாநிலம் கண்ணனுாரை சேர்ந்தவர் முகமது இர்பான், 29; திண்டல்-
ஆணைக்கல்பாளையம்
ரிங் ரோட்டில் ஜீவா நகர் ரயில்வே பாலம் அருகே, ஓல்ஸ்வேகன் போலோ காரில்
நேற்று மதியம் சென்று கொண்டிருந்தார்.
ஈரோடு தாலுகா
போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில் விலை உயர்ந்த மெத்தபெட்டமைன் போதை பொருள், 5 கிராம் இருந்தது.
விசாரணையில் விற்பனைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது. போதை
பொருளை பறிமுதல் செய்து, இர்பானை கைது செய்தனர். காரையும் பறிமுதல்
செய்தனர்.
