ADDED : டிச 23, 2024 09:28 AM
அ நிறம் | அளவு
கோபி: பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட்டுகிறது. குளிக்கும் வசதி எளிது என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.
தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் நேற்று தண்ணீர் வெளியேறவில்லை. இதனால் குறைந்த சுற்றுலா பயணிகளே வந்தனர். ஒரு சில இடங்களில் கொட்டிய தண்ணீரில் குளித்து சென்றனர்.
