ADDED : ஆக 11, 2025 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: கிருஷ்ண ஜெயந்தி வரும், 16ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு இஸ்கான் அமைப்பு சார்பில், ஈரோடு-பெருந்துறை சாலை ஆலயமணி திருமண மண்டபத்தில் அன்று மதியம், 3:00 மணிக்கு, 1,000 பக்தர்கள் பங்கேற்கும்
ஹரிநாம மந்திரம் உச்சாடனம் நடக்கிறது. இதில் பங்கேற்போருக்கு துளசிமாலை இலவசமாக வழங்கப்படும். விருப்பமுள்ளோர், 94437-20577, 99423-70503, 91719-97703 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம்.