/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
/
சுப்பிரமணியர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா
ADDED : பிப் 17, 2025 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியர் கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து இரண்டாண்டு நிறைவுற்ற நிலையில், ஆண்டு விழா நேற்று நடந்தது. முன்னதாக திரளான பக்தர்கள், 108 கலசங்களை ஏந்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்-தனர்.
மூலவர் சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வள்ளி-தெய்வானையுடன் உற்சவர் சுப்பிரமணியர், உட்-பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார். அலங்கரிக்கப்பட்ட சப்ப-ரத்தில் கோவில் உலா நடந்தது. காவடி ஆட்டம் ஆடி பக்தர்கள்
பங்கேற்றனர்.

