ADDED : மே 17, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை பதவி உயர்வு பெற்ற, ஆய்வக உதவியாளர் சங்க கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. மாநில தலைவர் திலிப் குமார் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சண்முக சுந்தரம், மாநில பொருளாளர் அய்யாவு மற்றும் பலர் பங்கேற்றனர். ஆய்வக உதவியாளர்களுக்கு ஆறாவது ஊதிய குழுவில் அமல்படுத்தப்பட்ட தேர்வு நிலை பெற்றவுடன் தர நிலை ஊதியம் ரூ.4,200 மற்றும் சிறப்பு நிலை பெற்றவுடன் தர நிலை ஊதியம் ரூ.4,400 வழங்க வேண்டும்.
எந்த ஒரு பதவி உயர்வும் இல்லாத பட்சத்தில் ஒரே பணியிடத்தில், 10 ஆண்டுகள் முடித்த ஆய்வக உதவியாளர்கள், தங்களுக்கு ஒரு நபர் ஊதிய குழு பரிந்துரைத்த அரசாணைப்படி வழங்கப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.வழிப்பறியில் ஈடுபட்ட
