ADDED : ஜூலை 07, 2025 04:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் விவேக்குமார், 26, கூலி தொழிலாளி. கே.ஏ.எஸ்.நகரில் ஒரு லாரியில் இருந்து இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் பாரத்தை இறக்கி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி லாரியில் இருந்து விழுந்தார். சக தொழிலாளர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்-சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்-பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
