/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஸ் மீது மொபட் மோதி பலியான கூலி தொழிலாளி
/
பஸ் மீது மொபட் மோதி பலியான கூலி தொழிலாளி
ADDED : ஜூன் 08, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, பவானி அருகே சீதபாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம், 60; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு சுசுகி ஆக்சஸ் மொபட்டில், பவானியில் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினார்.
சீதபாளையம் - பவானி சாலையில் வளைவில் திரும்பியபோது, பவானியில் இருந்து ஆப்பக்கூடல் சாலையில், தனியார் கம்பெனி பஸ் மீது மொபட் மோதியதில் பலத்த காயமடைந்தார். பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.