நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்; திருப்பூர் மாவட்டம் மூலனுாரில், கர்ப்பிணிக-ளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்-தது. திருப்பூர் மாவட்ட திட்ட அலுவலர் புவ-னேஸ்வரி, திட்ட அலுவலர் வனஜா முன்னிலை வகித்தார். மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, நுாற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு, வளையல் அணிவித்து, மங்கள பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்பை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட தி.மு.க., செய-லாளர் பத்மநாபன், மூலனுார் ஒன்றிய செயலா-ளர்கள் துரை தமிழரசு, பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தாராபுரத்திலும் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் கயல்விழி பங்கேற்றார்.

