ADDED : மார் 14, 2026 04:54 AM

அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு அருகே மோளக்கவுண்டன்பாளையத்தில் உள்ள காளி-யம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் திருவிழா கடந்த, 3ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
கடந்த, 5ல் குண்டம் திறத்தல், 8ல் தீர்த்தம் எடுத்து வர செல்-லுதல், 10ம் தேதி மதியம் குண்டம் பற்ற வைத்தல் நடந்தது.
அன்றிரவு, 9:00 மணிக்கு தீ மிதி விழா நடந்தது. இதில் நுாற்றுக்-கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 11ல் பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் நடந்த நிலையில், 12ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைந்தது.
