தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொலை செய்யப்பட்ட வக்கீல் உடலுக்கு இறுதி மரியாதை

கொலை செய்யப்பட்ட வக்கீல் உடலுக்கு இறுதி மரியாதை

கொலை செய்யப்பட்ட வக்கீல் உடலுக்கு இறுதி மரியாதை


ADDED : ஆக 07, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம், தாராபுரத்தில், கொலை செய்யப்பட்ட வக்கீல் உடல், நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்கு நடைபெற்றது.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த ஜூலை 28ல், உயர்நீதிமன்ற வக்கீல் முருகானந்தம், 41, நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, முருகானந்தத்தின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நீதிமன்ற வலியுறுத்தலின்படி, நேற்று முருகானந்தத்தின் உடலை, உறவினர்கள் பெற்று, தாராபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரது உடலுக்கு, வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.பின்னர் அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அமராவதி ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us