ADDED : செப் 24, 2024 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: அருந்ததியர் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள, 3 சதவீத உள் இட ஒதுக்கீடுக்கு எதிராக பேசிவரும் பட்டியலின தலைவர்களை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில், நேற்று ஆர்ப்-பாட்டம் நடந்தது. அருந்ததியர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழக்கறிஞர் ஈஸ்வரன் தலைமை வகித்தார்.
முனுசாமி முன்னிலை வகித்தார். பிரதாபன் பேசினார். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடுக்கு எதிராக, தொடர்ந்து பேசி-வரும் வி.சி.க., தலைவர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயா-வதி, இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் போன்ற பட்டியலின தலைவர்களை கண்டித்து கோஷமிட்டனர்.