/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எலுமிச்சை தோட்டம் அமைக்கும் பணி துவக்கம்
/
எலுமிச்சை தோட்டம் அமைக்கும் பணி துவக்கம்
ADDED : டிச 28, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே, எண்ணமங்கலம் பஞ்சாயத்துக்குட்-பட்ட விராலிக்காட்டூரில், மாவட்ட தோட்டக்கலைத்துறை மலைப்பயிர் சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி-ணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், எலுமிச்சை தோட்டம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
இதன்படி, 2.89 ஹெக்டர் பரப்பளவில் ஐந்து பேருக்கு ஒரு லட்சத்து, 71 ஆயிரம் மதிப்புள்ள 803 எலுமிச்சை தோட்டம் அமைத்திட, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் நேற்று பணியை துவக்கி வைத்தார். வேளாண்மை துறை உதவி இயக்-குனர் சரவணன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மல்-லிகா, பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.