/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எல்.ஐ.சி., முகவர்கள் காத்திருப்பு போராட்டம்
/
எல்.ஐ.சி., முகவர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 29, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்.ஐ.சி., முகவர்கள்
காத்திருப்பு போராட்டம்
ஈரோடு, அக். 29-
எல்.ஐ.சி., முகவர்கள் அசோசியேஷன் சார்பில், ஈரோட்டில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. பாலிசிதாரர்களின் பாலிசி போனஸ் தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும்.
முகவர்களுக்கான முழு காப்பீடு வயதை, அவர்கள் முகவராக தொடரும் வரை அதிகரிக்க வேண்டும். முகவர்களுக்கு பழைய கமிஷன் முறையை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈரோடு வடக்கு கிளை அசோசியேஷன் தலைவர் ஆனந்தன், கோட்ட செயலாளர் ராமசாமி, அகில இந்திய செயற்குழு உறுப்பினர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.