ADDED : மார் 10, 2026 04:27 AM
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 55,000 தேங்காய் விற்ப-னைக்கு வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 42.01 - 50.09 ரூபாய், பச்சை காய், 34.39 - 40.69 ரூபாய் என, 19,470 கிலோ தேங்காய், 8.44 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* கோபி தாலுகா சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்-பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ரகங்களுக்கான ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 250 கிலோ வரத்தாகி, கிலோ, 162 ரூபாய், பனங்கருப்பட்டி, 150 கிலோ வரத்தாகி, 205 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் தென்னங்க-ருப்பட்டி கிலோவுக்கு இரண்டு ரூபாய், பனங்கருப்பட்டி கிலோ-வுக்கு ஐந்து ரூபாயும் விலை கூடியது.* அந்தியூரில் நேற்று கூடிய வெற்றிலை சந்தைக்கு, 60 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி வெற்றிலை சிறிய கட்டு, 80 ரூபாய், பெரிய கட்டு, 100 முதல் 110 ரூபாய், பீடா வெற்றிலை கட்டு, 20 ரூபாய் முதல் 30, செங்காம்பு வெற்றிலை கட்டு, 20 முதல் 35 ரூபாய் என, ஏழு லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,478 கிலோ தேங்காய் பருப்பு வரத்தானது. ஒரு கிலோ பருப்பு அதிகபட்சம், 144.75 ரூபாய், குறைந்தபட்சம், 110 ரூபாய்க்கும் ஏலம் போனது. 1,478 கிலோ தேங்காய் பருப்பு, 2.13 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

