ADDED : செப் 20, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், வெள்ளகோவில் பகுதியில் கனிம வள கடத்தல் தொடர்பாக சென்ற புகாரின்படி, திருப்பூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர், செட்டியார்பாளையம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது வந்த ஒரு லாரியில் கிராவல் மண் இருந்தது.
ஆனால், உரிய அனுமதி இல்லை. லாரியை பறிமுதல் செய்து வெள்ளகோவில் போலீசில் ஒப்படைத்தனர். லாரி உரிமையாளர் முத்துார், புதுப்பாளையம் லீலாவதி என தெரிந்தது. வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.