ADDED : நவ 06, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, அம்மாபேட்டை அருகே நேற்று காலை, டிப்பர் லாரியில் மண் கடத்துவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், பிரம்மதேசம் அருகே தாசலியூரை சேர்ந்த மயில்சாமி, 43, என்பதும் இவர் செங்கல் சூளைக்காக மண் கொண்டு சென்றதும், மேலும் அவரிடம் உரிமம் இருப்பதும் தெரியவந்தது. இருப்பினும் லாரியை போலீசார் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர்.

