ADDED : நவ 22, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,மொடக்குறிச்சி-எழுமாத்துார் இடையே சாலை விரிவாக்கப்பணி ஒரு மாதத்துக்கும் மேலாக நடக்கிறது. ஈரோட்டில் இருந்து தனியார் நிறுவனத்தின் சிமெண்ட் கலவை இயந்திரம் பொருத்திய லாரி முத்துாருக்கு நேற்று சென்றது.
எழுமாத்துார் பகுதியில் சென்றபோது, சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் தோண்டியிருந்த குழியில் கவிழ்ந்தது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

