ADDED : நவ 22, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மண் கடத்திய
லாரி பறிமுதல்
தாராபுரம், நவ. 22-
தாராபுரம் போலீஸ் ஸ்டேஸன் எஸ்.எஸ்.ஐ., காளிமுத்து தலைமையிலான போலீசார், தாராபுரம்-உடுமலை ரோட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தாராபுரம், ராம்நகரை சேர்ந்த விஜயகுமார் ஓட்டி வந்த லாரியை சோதனை செய்ததில், 2 யூனிட் செம்மண் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், லாரியை பறிமுதல் செய்தனர்.