ADDED : செப் 25, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த டி.ஜி.புதுார் நால்ரோடு அருகே, பங்களாப்புதுார் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பாக்கு பொருட்கள், 9 -கிலோ அளவில் இருந்தது.
லாரி டிரைவரான கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த ராமசாமியை, 55, கைது செய்தனர். லாரியுடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.