ADDED : அக் 21, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு- பெருந்துறை சாலையில் உள்ள, மா.கம்யூ., கட்சியின் ஈரோடு மாவட்ட குழுவின் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டது. இதை அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் நேற்று திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் ரகுராமன் தலைமை வகித்தார். அலுவலகத்தின் மாடியில் உள்ள நினைவரங்கை, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
மத்தியக்குழு உறுப்பினர் சண்முகம் கல்வெட்டை திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.