ADDED : மே 24, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம், நேரு நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, 49, லாரி டிரைவர். அதே பகுதியில் டாஸ்மாக் பார் அருகில் நேற்று முன்தினம் மாலை நின்று கொண்டிருந்தார். செண்பகபுதுாரை சேர்ந்த ரஞ்சித் வந்தார். 'நான்கு வருடத்துக்கு முன் டிரைவர்கள் எல்லாம்
சேர்ந்து என்னை அடிச்சீங்க; அப்போ நீயும் அடித்தாய் தானே?' எனக்கூறி, ஆரோக்கியசாமியை தகாத வார்த்தைகளால் பேசி, கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆரோக்கியசாமி புகாரின்படி, சத்தியமங்கலம் போலீசார் ரஞ்சித்தை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
