ADDED : ஜன 06, 2025 02:19 AM
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகரை சேர்ந்த, 14 வயது சிறுவன், அரசு மேல்நிலை பள்-ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் இரவு பள்ளி அருகே சிறுவன் நடந்து சென்றபோது, டூவீலரில் வந்த ஒரு வாலிபர், வீட்டில் இறக்கி விடுவதாக கூறி ஏற்றி சென்-றுள்ளார்.
புஜங்கனுார் பஸ் நிறுத்தம் அருகே டூவீலரை நிறுத்திவிட்டு சிறு-வனை முட்புதருக்குள் வாலிபர் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுவன் கூச்சலிடவே சத்தம் கேட்டு வந்த மக்கள் ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். திடீரென பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். புகா-ரின்படி வாகன பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரித்-தனர். இதில் சிறுவனிடம் அத்துமீறிய செயலில் ஈடுபட்டது பனையம்பள்ளியை சேர்ந்த கார்த்திக், 36, என்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், சத்தி குற்றவியல் நடுவர் நீதி-மன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தி கிளை சிறையில் அடைத்தனர். கைதான கார்த்திக் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில், திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்-தனர்.

