sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது

/

வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது

வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது

வளர்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது


ADDED : மே 22, 2025 02:16 AM

Google News

ADDED : மே 22, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டம், அந்தியூர், சென்னம்பட்டி முரளி கிழக்கு வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 79. புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் பூபதி, 39. பூபதி வீட்டு வளர்ப்பு நாய், சுப்பிரமணியன் புதிதாக கட்டி வரும் வீட்டுக்குள் அடிக்கடி சென்று வந்தது.

இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், தன்னிடம் இருந்த எஸ்.பி.பி.எல்., (ஒற்றை குழல்) துப்பாக்கியால் நாயை சுட்டுள்ளார். இதில் நாய்க்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, கால்நடை மருத்துவமனையில் நாய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.பூபதி அளித்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சுப்பிரமணியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து உரிமம் பெற்ற துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us