/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெல்டிங், டிரில்லிங் மிஷின் திருடியவர் கைது
/
வெல்டிங், டிரில்லிங் மிஷின் திருடியவர் கைது
ADDED : நவ 06, 2025 01:53 AM
காங்கேயம், காங்கேயம் சுபாஷ் வீதியில் வசித்து வரும் சிவக்குமார், 42, காங்கேயத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். படியூரிலுள்ள இவரது மற்றொரு வீட்டில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகிறது. சிவன்மலையை சேர்ந்த பூபதி, 25, என்பவர் பணிகளை செய்து வந்தார். நேற்று முன்தினம் மதியம், 11:30 மணியளவில் பூபதி வெளியே சென்றபோது, கட்டட பணிக்காக பயன்படுத்த வைத்திருந்த வெல்டிங் மற்றும் டிரில்லிங் மிஷின் ஆகியவை திருட்டு போனது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள, சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்து, காங்கேயம் போரீசார் விசாரணை நடத்தினர்.
அதில் திருட்டில் ஈடுபட்ட வெள்ளகோவில், செம்மாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவகுமார், 33, என்பவரை டாஸ்மாக் கடையில் வைத்து போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து பொருட்களை மீட்டனர். பின்னர், காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

