ADDED : ஆக 12, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, கங்காபுரம், குட்டக்காடு குமரன் நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 54, தறி பட்டறை தொழிலாளி. கனிராவுத்தர் குளத்தில் இருந்து வில்லரசம்பட்டி சாலையில் ஐ-க்யூப் மொபட்டில் எல்லப்பாளையம் நோக்கி, கடந்த, 10ம் தேதி காலை சென்றார் வில்லரசம்பட்டி அம்மன் நகரை கடக்க முற்பட்ட போது மண் சறுக்கி விழுந்தார்.
தலையில் காயமடைந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.