ADDED : பிப் 19, 2026 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே எ.செட்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்-குமார், 45, கூலித்தொழிலாளி; இவர் மனநலம் பாதித்து வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, தோட்டத்துக்கு செல்-வதாக கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நி-லையில், அவர்களது தோட்டத்து கிணற்றில் செந்தில்குமார் நேற்று விழுந்து கிடந்தார்.நம்பியூர் தீயணைப்பு துறையினர், செந்தில்குமாரை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மனநிலை சரியில்லாத செந்தில்குமார், கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாக, சகோதரர் வேலுமணி கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

