/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் 8 எஸ்.பி.,க்களுடன் மண்டல ஐ.ஜி., ஆலோசனை
/
ஈரோட்டில் 8 எஸ்.பி.,க்களுடன் மண்டல ஐ.ஜி., ஆலோசனை
ADDED : மார் 11, 2026 06:50 AM
ஈரோடு:ஈரோடு எஸ்.பி.,அலுவலகத்தில்
மேற்கு மண்டல போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நேற்று நடந்தது. மேற்கு
மண்டல ஐ.ஜி., சரவணசுந்தர் தலைமை வகித்தார்.
டி.ஐ.ஜி.,க்கள் சுவாமிநாதன்,
சந்தோஷ் அடிமணி, எஸ்.பி.,க்கள் ஈரோடு சுஜாதா, கோவை கார்த்திகேயன்,
திருப்பூர் யாதவர் கிரீஷ், நீலகிரி நிஷா, நாமக்கல் விமலா, தர்மபுரி
மகேஸ்வரன், கிருஷ்ணகிரி தங்க-துரை, சேலம் ஏ.டி.எஸ்.பி., செல்வராஜ்
கலந்து கொண்டனர்.
நடப்பாண்டில் நடந்த குற்ற சம்பவங்கள், அவற்றின்
மீதான நடவடிக்கை, திருட்டு வழக்குகள் எண்ணிக்கை,
கண்டுபிடிக்-கப்பட்ட வழக்கு, கொலை வழக்குகளின் பின்னணி,
நீதிமன்-றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு, மேற்கு மண்டலத்துக்கு
உட்பட்ட மாவட்டங்களில் சட்டசபை தேர்தல் முன் ஏற்பாடு நடவடிக்கை,
முன் எச்சரிக்கை நடவடிக்கை, பதற்ற ஓட்டுசாவ-டிகளில் மேற்கொள்ள
வேண்டிய பாதுகாப்பு முறைகள் உள்ளிட்-டவை குறித்து ஆலோசனை நடந்தது.
நிலுவை குற்ற வழக்கு-களை, குறிப்பாக நீதிமன்றத்துக்கு செல்லாத
வழக்குகளை, விரைந்து முடிக்க ஐ.ஜி., உத்தரவிட்டார்.

