ADDED : மார் 05, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்;வெள்ளகோவில் அருகே கல்லாங்காடு வலசை சேர்ந்தவர் ராமாயி, 52; இவரின் கணவர் மணி, 60; மணிக்கு குடிப்பழக்கம் உள்ளது.
இதை ராமாயி கண்டித்தும் கேட்கவில்லை. நேற்று முன்தினம் மணி வழக்கம்போல் போதையில் வந்துள்ளார். அப்போது வாக்குவாதம் செய்த ராமாயி, வீட்டுக்குல் சென்று, சேலையால் துாக்கிட்டு கொண்டார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

