sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஓட்டல்களில் மயோனைஸ் பயன்பாடு ஆய்வு இரண்டு கடைகளுக்கு அபராதம் விதிப்பு

/

ஓட்டல்களில் மயோனைஸ் பயன்பாடு ஆய்வு இரண்டு கடைகளுக்கு அபராதம் விதிப்பு

ஓட்டல்களில் மயோனைஸ் பயன்பாடு ஆய்வு இரண்டு கடைகளுக்கு அபராதம் விதிப்பு

ஓட்டல்களில் மயோனைஸ் பயன்பாடு ஆய்வு இரண்டு கடைகளுக்கு அபராதம் விதிப்பு


ADDED : ஏப் 30, 2025 01:38 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை::

பெருந்துறையில் ஓட்டல்களில் மயோனைஸ் பயன்பாடு உள்ளதா என சோதனை நடந்தது.

பதப்படுத்தப்படாத பச்சை முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் என்ற உணவுப்பொருளால், இரைப்பை மற்றும் குடல் தொற்று ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து மயோனைஸ் தயாரிப்பு, சேமிப்பு, வினியோகம் மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் பெருந்துறை நகரில், 30க்கும் மேற்பட்ட அசைவ, சைவ உணவகம் மற்றும் பாஸ்ட் புட் கடைகளில், மயோனைஸ் தயாரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து, பெருந்துறை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் எந்த ஓட்டலிலும் மயோனைஸ் பயன்பாடு கண்டறியப்படவில்லை.

அதேசமயம் உணவக உரிமையாளர்களிடம் சைவ மயோனைஸ் பயன்படுத்துவது குறித்தும் சவர்மா, கிரில் சிக்கன், தந்துாரி சிக்கன் உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை நன்றாக வேக வைத்து, 4 மணி நேரத்திற்குள் விற்பனை செய்யவும் அறிவுறுத்தினர். ஆய்வின் போது தடை செய்யப்பட்ட கேரி பேக் மற்றும் செய்திதாள்களில் உணவு பொருள் வைத்து வழங்கிய பேக்கரி உரிமையாளருக்கு, 3,000 ரூபாய் அபராதம், பாலிதீன் கவரில் உணவு பொருள் பேக் செய்த, உணவக உரிமையாளருக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

தடை செய்யப்பட்ட மயோனைஸ் மற்றும் புகையிலை பொருள் விற்பனை மற்றும் உணவு பொருளில் குறைபாடு இருந்தால், 94440-42322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us