/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறன் குட்டீஸூக்கு மருத்துவ மதிப்பீடு முகாம்
/
மாற்றுத்திறன் குட்டீஸூக்கு மருத்துவ மதிப்பீடு முகாம்
மாற்றுத்திறன் குட்டீஸூக்கு மருத்துவ மதிப்பீடு முகாம்
மாற்றுத்திறன் குட்டீஸூக்கு மருத்துவ மதிப்பீடு முகாம்
ADDED : டிச 10, 2025 10:59 AM
திருப்பூர்: மாற்றுத்திறன் குழந்தைகள், அவர்களின் பெற்-றோர், பாதுகாவலர் சிரமங்களை போக்க, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்-துறை, மாவட்ட கல்வித்துறை சார்பில்,
2026 ஜன. 9ம் தேதி வரை, அனைத்து வட்டாரங்களிலும், மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்தப்பட உள்ளது.
இதன்படி ஜன., 7ல் மூலனுார் அரசு மேல்நிலைப்-பள்ளியில், ஜன., 8 மற்றும் 9ம் தேதிகளில் முறையே உடுமலை மற்றும் காங்கேயம் அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் முகாம் நடக்கிறது. பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்-பர்.
மாற்றுத்திறன் குழந்தைகளை இலவசப் பரிசோ-தனை செய்து அவர்களுக்கு தேவைப்படும் உதவி, மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்-வுக்கு ஆலோசனை வழங்குவர். மருத்துவ சான்-றிதழ் வழங்கல், தேசிய அடையாள அட்டைக்-கான பதிவு உள்ளிட்டவையும் நடைபெறும்.

