ADDED : ஏப் 18, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோட்டை அடுத்த வேலம்பாளையத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரி முத்துசாமி, 64; பலருக்கு பணம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் வாங்கியவர்கள் உரிய காலத்தில் தராமல் தாமதம் செய்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முத்துசாமி, நேற்று முன்தினம் வீட்டில் துாக்குமாட்டி கொண்டார்.
இதை கண்ட தொழிலாளி முருகேசன், முத்துசாமியை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அறச்சலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

